தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு விடைத்தாள் திருத்தம்!
தமிழகத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தி முடக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு வினாத்தாளை ஒரு வாரத்திற்குள் திருத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வினாத்தாள் திருத்தம்:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவைகளை ரத்து செய்தது. மேலும் பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் 1 -12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் ஓமிக்ரான் அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு கடந்த வாரம் 10,12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றது.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த திருப்புதல் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. அந்த வகையில் தனியார் பள்ளிகளில் இருந்து 10,12ம் வகுப்பு மாணவர்களின் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இது குறித்த விசாரனைகளும் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் திருப்புதல் தேர்வு முடிவடைந்துள்ளது. தினமும் தேர்வு முடிந்தவுடன் எஸ்.கே.பி பள்ளி சேகரிப்பு மையத்தில் விடைத்தாள் ஒப்படைக்கப்பட்டது. சேகரிப்பு மையத்தில் இருந்து மதிப்பீட்டு பணிக்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் விடைத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக்குழு பரிந்துரை!
இந்த வினாத்தாள்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் வாயிலாக திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடையில் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டதால் விடைத்தாள் திருத்தம் செய்ய ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலேயே விடைத்தாள்களை திருத்தம் செய்து, வரும், 21ல், அவரவர் பள்ளியில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.