CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள்!
மத்திய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி செயல்படும் CBSE பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு, முதல் கட்ட பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அதற்கான பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியீடு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதன்படி மத்திய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி செயல்படும் CBSE பள்ளி மாணவர்களுக்கும் பொது தேர்வுகள் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களின் கற்றல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் இத்தகைய நிலையை தவிர்க்கும் விதமாக CBSE பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆதார் PVC கார்டு – ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
அதன்படி 50% பாடத்திட்டத்தின்படி முதல் பருவத்தேர்வும், மீதமுள்ள 50% பாடத்திட்டத்தின்படி இரண்டாம் பருவத்தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏனெனில் கொரோனா தொற்று மீண்டும் பரவினால் இதில் ஏதேனும் ஒரு தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி நிர்ணயிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திட்டமிட்டபடி முதல் பருவத்தேர்வானது CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதமும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதமும் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் நாளை (ஜன.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில் நடந்து முடிந்த முதல் பருவத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தேர்வுத்துறை அதிகாரி தேர்வு முடிவுகள் தயார்நிலையில் என்றும், விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் CBSE ன் அதிகாரபூர்வ இணையதளமான DigiLocker UMANG ஆப்களிலும் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை விரைவில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.