தமிழகத்திற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.183.67 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!!
மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வருவாய் பற்றாக்குறை மானிய தொகையாக தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இத்துடன் 17 மாநிலங்களுக்கும் மானியத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை மானியம்:
மாநிலங்களின் வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை பொருத்து வருவாய் பற்றாக்குறை நிதி மத்திய அரசால் மானியமாக மாநிலங்களுக்கு வழங்கப்டுகிறது. மாதம் தோறும் மாநிலங்களுக்கான வருவாய் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு ஆய்வு செய்து வழங்கும். தற்போது ஆறு மாதங்களுக்கான மானிய பணத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் – சட்டப் போராட்டக் குழு அறிவிப்பு!
2021-22-ஆம் நிதியாண்டில் ஆந்திரப்பிரதேசம், அசாம், ஹரியாணா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம். நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு ரூ.1,18,452 கோடி வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தை 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியில் இருந்து இதுவரை ரூ.69,097 கோடி (58.33%) வழங்கப்பட்டுள்ளது.
நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
வருவாய் பகிர்வுக்குப் பின் மாநிலங்களின் கணக்குகளில் பற்றாக்குறையைப் போக்க 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியம் மாதத் தவணைகளாக வழங்கப்படுகிறது. மேலும் 17 மாநிலங்களுக்கும் வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.9,871 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,285.67 கோடி என மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தெரிவித்துள்ளது.