தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிச.27 இல் ரிசல்ட்!
தமிழகத்தில் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் 27ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
பிளஸ் 1 மறுகூட்டல் ரிசல்ட்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கடந்த 18 பரவி மாதங்களாக உள்ளது. இதன் அடிப்படையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதாவது பள்ளிகள் தொடங்கி அரசு பணி தேர்வுகள் வரை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் என அனைத்தும் இயங்கும் அளவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடனை பெறுவது எப்படி? சுயதொழில் தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு!
தமிழகத்தை பொறுத்தவரை முதலில் உயர்நிலை மற்றும் மேல்நிலை, கல்லூரிகள் என செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும் கடந்த நவம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இதன அடிப்படையில் கொரோனா பரவல் குறைவின் காரணமாக பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மற்றும் தேர்வு எழுதாதவர்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டு பணி நிறைவடைந்து நவம்பர் 9 ஆம் தேதி பிளஸ் 1 துணைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்குமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
அதன் பின்னர் அந்த தேர்வு விடைத்தாளில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 27ம் தேதி பிற்பகல் 1:00 மணிக்கு ரிசல்ட் வர உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. மதிப்பெண் மறுகூட்டல் உள்ள தேர்வர்களின் பதிவெண் அடங்கிய பட்டியல், அதிகாரபூர்வமான இணையதளத்தில் வெளியிடப்படுவதாகவும் மற்றும் பட்டியலில் எண்கள் இல்லாதவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு மட்டும், திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை, இணையதளத்தில் பதிவிறக்கம் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்ம அறிவிப்பில் கூறியுள்ளார்.