Post Office இல் ரூ.1000 சேமிப்பதன் மூலம் ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ் – செல்வமகள் சேமிப்பு திட்டம்!
மத்திய அரசின் அஞ்சல் துறையின் கீழ் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சிறந்த சேமிப்பு திட்டமான செல்வமகள் திட்டம் குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
செல்வமகள் திட்டம்:
மத்திய அரசு பெண்குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். அதனால் பெண்குழந்தை வைத்திருக்கும் அனைவரிடமும் இத்திட்டம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த செல்வமகள் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கலாம். இத்தகைய சேமிப்பு தொகைக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் பணம் தேவை என்றால் கணக்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் முடிவில் பணம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இதன் முதிர்வு காலமான 21 ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் சேமிப்பு தொகையில் 3 மடங்கு தொகை கிடைக்கும். இந்த கணக்கை பெண் குழந்தையின் 18 வயது வரை மட்டுமே கணக்கை தொடங்கியவர் இயக்க முடியும்.
அதன் பின்னர் அந்த பெண்குழந்தை மட்டுமே இயக்க முடியும். இந்த செல்வமகள் திட்டத்தில் இணைய விரும்புவோர் பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டையை எடுத்துச் சென்று அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் குழந்தையின் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். மாதம் ரூ.1000 சேமிப்பதன் மூலம் திட்டத்தின் முதிர்வில் ரூ.5.09 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெற முடியும். மத்திய அரசின் இந்த சேமிப்பு தொகைக்கு வருமான வரி விலக்கு கிடைக்கிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்