மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – ஜன.1 முதல் அமல்! அரசு அதிரடி அறிவிப்பு!

0
மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு - ஜன.1 முதல் அமல்! அரசு அதிரடி அறிவிப்பு!
மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு - ஜன.1 முதல் அமல்! அரசு அதிரடி அறிவிப்பு!
மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – ஜன.1 முதல் அமல்! அரசு அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு அண்மையில் வெளியிட்டது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.

ஓய்வு பெறும் வயது உயர்வு

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தது. அதனால் பல்வேறு மாநிலங்களில் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதில் குறிப்பாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் 11வது ஊதிய திருத்த குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60லிருந்து 62 ஆக உயர்த்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கு ஹாப்பி நியூஸ் – உணவகங்களின் விபரம் வெளியீடு!

இந்த நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதியுடன் 60 வயது நிரம்பிய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற இருந்தனர். ஆனால் ஓய்வு பெறும் வயது உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகதால் ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்களின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்தப்படும் என்ற அதிகார்பூர்வ அரசாணையை அம்மாநில அரசு வெளியிட்டது. அத்துடன் இது தொடர்பான பொது வேலைவாய்ப்பு குறித்த அவசரச் சட்டத்தை அம்மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் வெளியிட்டார்.

தமிழகத்தில் 5 நாட்கள் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

அதன்படி இந்த ஓய்வு பெறும் வயது உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மூத்த ஊழியர்களின் அனுபவம் மற்றும் அவர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரசு வேலைக்கு காத்திருக்கும் போட்டி தேர்வர்கள் மிகுந்த வருத்தத்துடன் உள்ளார்கள். எனில் 60 வயதில் ஓய்வு பெற உள்ளவர்கள் மேலும் 2 ஆண்டுகள் பணிபுரிவார்கள். அதனால் அரசு பணியிடத்தில் குறைவான அளவு காலிப்பணியிடங்கள் இருக்கும். அதனால் இளைஞர்களுக்கு குறைந்த அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!