தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? திமுக அரசின் திட்டம் என்ன?

2
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? திமுக அரசின் திட்டம் என்ன?
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? திமுக அரசின் திட்டம் என்ன?
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? திமுக அரசின் திட்டம் என்ன?

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தற்போது உள்ள நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஓய்வு பெறும் வயது:

தமிழக அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்ட படி 2022 ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.

HCL Tech நிறுவனத்தில் புதிதாக 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு – சூப்பர் திட்டம்!

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அதிமுக தலைமையிலான அரசு ஓய்வு பெறும் வயதை 58 ல் இருந்து 60 ஆக உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இருந்தாலும் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பையும் பெற்றது. கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரி செய்ய இத்தகைய முடிவை அரசு எடுத்தாக கூறப்பட்டது. தற்போது திமுக தலைமையிலான அரசு ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த ஆலோசனை நடத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

நடப்பு ஆண்டில் 60 வயது நிரம்பியவர்கள் ஓய்வு பெற்றால் அரசுக்கு சுமார் 18,000 கோடி நிதி தேவைப்படுகிறது. மேலும் இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இருப்பதால் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க 300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அடுத்து இருக்கும் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய புதியவர்களை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு ஊதியம் வழங்க 600 கோடி செலவாகும். எனவே ஆக மொத்தம் தற்போது 60 வயது நிரம்பியவர்கள் ஓய்வு பெற்றால் அரசுக்கு ஆண்டுக்கு 18,400 கோடி தேவைப்படும். இத்தகைய செலவினத்தை தவிர்க்க தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. அரசு ஊழியர்களின் சம்பளம் ரூபாய் 50000, குறைவாக உள்ளது என்றால், அவர்களது மாத குடும்பச்செலவு விவரம் கொடுக்க தயாரா? அரசின் வரி வருவாய் 4ல் 3 பங்குக்கிற்கும் குறையாமல் திண்டு தீர்க்கும் வகையில் உள்ளது.
    நாடு நலம் பெற சம்பளத்தை குறைக்க வேண்டும்.

  2. இது முட்டாள்தனமான என்னம் 12 மாத சம்பளம் எவ்வளவு என்பதை கணிக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!