அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும்வயது உயர்வா? – நிதித்துறை விளக்கம்!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து அரசு வெளியிட்டிருந்த அரசாணையின் படி சில குறிப்பிட்ட துறையினருக்கு உள்ள விதிவிலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயது:
சில அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர் அல்லாத பல்கலை பணியாளர்கள், ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62 ஆக நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்தி 2022 ஜனவரி 31ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், அரசுப் பணிகள் மற்றும் அரசுப் பணிகள் தொடர்பாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அரசின் நிதித்துறை தற்போது சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் நிர்வாகத்தில் பணி புரியும் அதிகாரிகள், பிற ஊழியர்களின் சம்பளம் மற்றும் அகவிலைப்படி போன்றவற்றை ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் இருந்து கொடுக்கின்றனர். 1984 ஆம் ஆண்டு AP பொது வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான முடிவை மாநில அரசு எடுத்த பின்னர், உத்தரவுகள் வெளியிடப்பட்டன.
Exams Daily Mobile App Download
அரசு வேலை உங்களது கனவா..? அப்போ இந்த செய்தியை படிக்கலைனா இழப்பு உங்களுக்கு தான்!
ஆனால்,மேற்க்கூறிய பணியாளர்கள், ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62 ஆக நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதை அரசு நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அரசாங்க நடைமுறைகள் மற்றும் வணிக விதிகளை மீறுவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்