தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – முதல்வரின் முடிவு என்ன?
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவை தமிழக அரசு எடுத்தால், அது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் முடிவாக இருக்கும். எனவே ஓய்வு வயதை உயர்த்த வேண்டாம் என இளைஞர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
ஓய்வு வயதை உயர்த்தாதீங்க?
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 60 ஆக அதிகரித்தது. இதற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும் அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பானது நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது திமுக தலைமையிலான அரசு ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாக சில நாட்களாக இணையத்தில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை (மே 25) உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். இதுவரை அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 15 லட்சம் அரசு ஊழியர்களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் முதல் 2 லட்ச ரூபாய் வரை இருக்கும்.
Exams Daily Mobile App Download
இவர்களின் ஓய்வு வயதை உயர்த்துவதால், அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை தான் ஏற்படும். அதற்குப் பதிலாக, புதியவர்களை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு முதலில் வழங்கப்படும் சம்பளம் குறைவாகவே இருக்கும். மேலும் கூடுதல் நபர்களையும் பணிக்கு அமர்த்த முடியும். இதன் மூலம் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுடன், காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும் அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமை இருக்காது. எனவே அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்காமல், புதிய வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்பதே அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.