தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு – ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் ரிடயர்ட்!
தமிழகம் முழுவதும் நேற்று (மே 31) ஒரே நாளில் 7,000 அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். மேலும் சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் சுமார் 46 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது இவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.
ஊழியர்கள் ஓய்வு:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த நிலையில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அரசுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவியது. இந்த சூழலில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தபட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் வந்தது. ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்துக்கிடக்கின்றனர். இந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!
பணியில் உள்ள ஊழியர்கள் ஓய்வு பெற்றால் தான் இளைஞர்கள் மற்றும் அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 திலிருந்து 62 ஆக உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியில் நேற்று 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதில் சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 46 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். மேலும் கூட்டுறவு துறையில் – 56, மருத்துவ துறை -115, பொது சுகாதாரத்துறை – 87 பேர், வேளாண்மை துறை – 34 பேரும் ஓய்வு பெற்றுள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும் கால்நடை பராமரிப்பு துறையில் 15 பேர் என சுமார் 7,000 பேர் வரை நேற்று தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். அதனை தொடர்ந்து இந்த மாதத்தில் மட்டும் நடப்பு ஆண்டில் மட்டும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என மொத்தம் சுமார் 25,000 பேர் வரை ஓய்வு பெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணை தலைவர் தெரிவித்துள்ளார். ஒரே மாதத்தில் அதிகளவு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறுவதால் அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும். இதனால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையும் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.