தமிழக அரசு சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு, பணிக்காலம் – கோரிக்கை முன்வைப்பு!
தமிழகத்தில் சத்துணவு சமையலர் ஓய்வு வயது 60 என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் 58 வயதானதும் ஓய்வு பெற அதிகாரிகள் அனுமதித்து வருவதாக கூறி போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
ஓய்வு வயது:
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு காலத்தை நிர்ணயிப்பதில் எப்போதும் குழப்பம் நிலவி வருகிறது. தற்போது சத்துணவு சமையலர் ஓய்வு வயது அதிகரிப்பு, வேலை நிறுத்த காலத்தை பணிக்காலமாக கருதுவது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தவற்றை அரசாணையாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தின் போது இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் சிமெண்ட் விலை கிடுகிடுவென அதிகரிப்பு – பொதுமக்கள் கலக்கம்!
அறிவிப்புகள் வெளியிடப்படும் இதுவரை அரசாணை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர், ஓய்வு பெறும் வயது 60 என அறிவித்திருந்த நிலையில் சத்துணவு சமையலர், உதவியாளர்கள் 58 வயதானதும் ஓய்வு பெற அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர். இது குறித்து மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் அறிவித்ததாவது, முதல்வரின் சட்டசபை அறிவிப்புகளை அரசாணையாக வெளியிட்டால் தான் உண்மையான பலன் அரசு ஊழியர்களை சேரும்.
அக்.9ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை – தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு!
மாநிலத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்துவதை சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் விடுமுறையின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஞாயிறு அன்றும் துறை ரீதியான பணிகளில் ஈடுபடுத்துவதை சங்கம் கண்டிக்கிறது. நிதி ஒதுக்கீடு இன்றி மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தவும் அரசு நிர்பந்திக்கிறது. குறிப்பிட்ட அளவு தடுப்பூசி செலுத்த அரசு நிர்பந்திப்பதால் சுகாதார செவிலியர்கள் விபத்தில் சிக்கும் அவலம் நிலவுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.