தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைப்பு? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. மேலும் நேற்று மட்டும் 7000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அத்துடன் தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக தமிழக முதல்வர் செய்தியாளரிடம் கூறியதை பார்ப்போம்
ஓய்வு வயது
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. அத்துடன் சட்டசபை தேர்தல் சமயத்தில் திமுக தனது வாக்குறுதியில், தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மேலும் அரசு ஊழியர்கள் இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் அரசு ஊழியர்களை திருப்திப்படுத்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மேலும் 2 வருடங்கள் உயர்த்த உள்ளதாக தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டுமே 7000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அத்துடன் இந்த ஆண்டில் 25000 ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது அரசுக்கு நிதி நெருக்கடியை அதிகப்படுத்துமா? அல்லது குறைக்குமா? என்று பார்க்கும் போது குறைப்பதற்கு சாத்திய கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது ஓய்வு பெற உள்ள ஊழியரின் வயதை மேலும் அதிகரித்தால் அவர்களுக்கு அதிகமான சம்பளம் வழங்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் புதியதாக ஊழியர்களை நியமித்தால் அவர்களுக்கு குறைவாக சம்பளம் கொடுத்தால் போதுமானது. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இது தொடர்பாக தமிழக முதல்வர் செய்தியாளரிடம் கூறியதாவது, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.