தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? அரசு ஆலோசனை!

0
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? அரசு ஆலோசனை!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? அரசு ஆலோசனை!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? அரசு ஆலோசனை!

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வு பெறும் வயது:

தமிழக அரசில் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வு பெறும் வயது 2020 வரை 58 ஆக இருந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. மேலும் அதிமுக தலைமையிலான அரசு கடந்த 2020-ம் ஆண்டு, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 60 ஆக அதிகரித்தது. இதற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

Exams Daily Mobile App Download

கொரோனா நேரத்தில் குறிப்பிட்ட துறையில் இருக்கும் அரசுப் பணியாளர்கள் மிகத் தீவிரமாக வேலை செய்து வந்தனர், அவர்களில் ஓய்வு பெறுபவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கடினமான சூழலில் அரசு ஊழியர்களை ஓய்வு பெற அனுமதித்தால் மக்கள் பணியில் தொய்வு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அது நிஜமான காரணம் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரி செய்ய இத்தகைய முடிவை அரசு எடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது திமுக தலைமையிலான அரசு ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Post Office இல் தினமும் ரூ.1400 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

நடப்பாண்டில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஓய்வு பெற்றால் அரசுக்கு சுமார் 18,000 கோடி நிதி தேவை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்க 300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதையடுத்து காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய புதியவர்களை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு ஊதியம் வழங்க 600 கோடி செலவு ஆகும். இத்தகைய செலவினத்தை தவிர்ப்பதற்கு தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகிறது. மேலும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி கொண்டே போனால் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பது கடும் சவாலான ஒன்றாக மாறி விடும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!