போடி – மதுரை இடையே சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் தேனி மாவட்டம் போடி – மதுரை இடையேயான ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து விட்டது. இதனையடுத்து பிப்ரவரி 19ம் தேதி முதல் மீண்டும் போடி, மதுரை, தேனி இடையான ரயில் துவங்கப்பட உள்ளது.
ரயில் சேவை:
தமிழகத்தில் தெற்கு ரயில்வேயின் சார்பாக மதுரை மற்றும் போடி இடையிலான ரயில் பாதையை அகலப்படுத்தும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்தடுத்து நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் காரணமாக இந்த பணியானது முடிவு பெறாமல் பாதியிலேயே நின்றுவிட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
நீண்ட இடைவேளைக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீண்டும் மதுரை – போடி இடையிலான ரயில் பாதை பணிகள் துவங்கியது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளதாக ஆய்வு குழு தகவல் தெரிவித்தது.
தமிழக திருக்கோயில் பணியாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி 38% ஆக உயர்வு!!
இதனை அடுத்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரை – தேனி வரையிலான சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் – மதுரை இடையேயான அதி விரைவு ரயிலையும் இரு மார்க்கமாக பிப்ரவரி 19ம் தேதி முதல் போடி வரை நீட்டித்து இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. தேனியில் இருந்து நேரடியாக சென்னைக்கு ரயில் இயக்கப்படவுள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.