ஆகஸ்ட் 9 வரை பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் கூட தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
ஆகஸ்ட் 9 வரை பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் கூட தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஆகஸ்ட் 9 வரை பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் கூட தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஆகஸ்ட் 9 வரை பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் கூட தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் தீவிர தாக்கத்தை குறைக்க மாநில வாரியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகளுடனான ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் திருவிழாக்கள், மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்து உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது நாகப்பட்டினத்தில் உள்ள நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் கூட ஆகஸ்ட் 9 வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடற்கரை பகுதிகளில் கூட தடை:

உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதை தொடர்ந்து தளர்வுகளுடனான ஊரடங்கு மீண்டும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் அவசியமாகிறது. இதனை கருத்திற்கொண்டு திருவிழாக்கள், மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நாகை கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

TN Job “FB  Group” Join Now

வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி ஆடி அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கூடுவதன் மூலம் நோய்த்தோற்று தீவிரமாக பரவும் அபாயம் உள்ளதால் திருவிழாக்கள், மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்ததை தொடர்ந்து நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு ஆகஸ்ட் 9 வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!