அடுத்த 12 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கில் தளர்வுகள் அமல் – நகர நிர்வாகம் அறிவிப்பு!

0
அடுத்த 12 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கில் தளர்வுகள் அமல் - நகர நிர்வாகம் அறிவிப்பு!
அடுத்த 12 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கில் தளர்வுகள் அமல் - நகர நிர்வாகம் அறிவிப்பு!
அடுத்த 12 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கில் தளர்வுகள் அமல் – நகர நிர்வாகம் அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் இன்று (மே 9) 12 மணி நேரம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக முடக்கப்பட்டிருந்த இணைய சேவையும் மீண்டும் தொடங்கி இருக்கிறது.

ஊரடங்கு தளர்வு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக 8 மணிநேரங்கள் மட்டும் தளர்வுகள் அளிக்கப்படு வந்தது. இப்போது ஜோத்பூரின் ஜலோரி கேட் பகுதியில் நடைபெற்ற வன்முறையின் போது கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு முடக்கப்பட்ட இணைய சேவைகள் நேற்று (மே.8) மாலை 4 மணி முதல் மீண்டுமாக தொடங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – இனி கோதுமை கிடையாது!

என்றாலும், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் செய்திகளை பகிர வேண்டாம் என்று ஜோத்பூரின் மூத்த காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இதற்கு முன்னதாக, முழு ஊரடங்கில் இருந்து நேற்று (மே.8) காலை 8 மணி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், மக்கள் மளிகை, பால், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு குவிந்துள்ளனர். இருப்பினும், ஜோத்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து ஜோத்பூரில் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று (மே 9) முதல் 12 மணி நேரம் தளர்த்தப்படுவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘முழு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோது எந்த வன்முறை சம்பவமும் பதிவாகவில்லை. இதனால் திங்கட்கிழமை (மே 9) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஊரடங்கு சட்டத்தில் தளர்வு அளிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை காரணமாக இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!