தமிழக கோயில் ஆடல், பாடல் விழாவிற்கான கட்டுப்பாடுகள் – உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு!

0
தமிழக கோயில் ஆடல், பாடல் விழாவிற்கான கட்டுப்பாடுகள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு!
தமிழக கோயில் ஆடல், பாடல் விழாவிற்கான கட்டுப்பாடுகள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு!
தமிழக கோயில் ஆடல், பாடல் விழாவிற்கான கட்டுப்பாடுகள் – உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய கோவில் திருவிழாக்களின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம் இதற்கு அரசு அனுமதி தர மறுத்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆடல், பாடல் நிகழ்ச்சி :

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பழமை வாய்ந்த பல்வேறு கோயில்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் முறையாக சுவாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களின் சம்மதத்துடன் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் போது காவடி எடுத்தல் மற்றும் பிற நேத்தி கடன்களை பக்தர்கள் செய்வது வழக்கம் அதன் ஒரு பகுதியாக நிறைவு விளைவாக ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளின் போது விதிகளை மீறிய செயல்களில் மக்கள் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

Big Boss சீசன் 6 போட்டியாளர்கள் இவர்கள் தானா? வைரலாகும் தகவல்!

இரவு நேரத்தில் நடைபெறும் இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் இடம் பெறுவதாகவும், மத ரீதியான பாடல்கள் இசைக்கப்படுவதாகவும் பல குற்றச்சாட்டு முன் வந்தது. இதனையடுத்து ஆடல், பாடல் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையின் போது நீதிபதி சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதாவது ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் மற்றும் பாடல்களோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது. அத்துடன் அரசியல் மற்றும் மத ரீதியான பிளக்ஸ்கள் இடம் பெற கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக்கூடாது. மேலும் நிகழ்ச்சியின் போது பொதுமக்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இருக்க கூடாது. அத்துடன் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்தபட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!