மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்? மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்துள்ளதால் சமூகம், விளையாட்டு, மத, அரசியல், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் திருவிழா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தளரும் கட்டுப்பாடுகள்:
கொரோனா பாதிப்பினால் மக்களின் அன்றாட வேலைகளில் இருந்து பள்ளிக்கு செல்லும் குழைந்தைகள் வரை பாதிப்படைந்துள்ளனர். அரசும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மக்கள் அனைவருமே இந்த விதிகள் அனைத்தையுமே சரியாக பின்பற்றி வந்ததால் கொரோனா சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி 2’ சீரியலில் இல்லத்தரசியாக களமிறங்கும் நதியா? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டுமே கடந்த 24 மணிநேரத்தில் 13,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 302 பேர் உயிரிழந்துவிட்டனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் மாஸ்க் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை – கோரிக்கை போராட்டம்!
இதனால் சமூகம், விளையாட்டு, மத, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கலந்தோசித்து நீக்கி விடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கல்வி மற்றும் திருவிழா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க முடிவெடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.