தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அளித்து இன்று (ஜூலை 5) முதல் வரும் ஜூலை 12 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி கூடுதல் தளர்வுகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு வார காலமாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 5) காலை 6 மணி முதல் முடிவுக்கு வரும் ஊரடங்கு உத்தரவை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் ஜூலை 12, காலை 6 மணி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் தற்போது கூடுதல் தளர்வுகளையும் முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அரசு உத்தரவு!
இதுவரை மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு, இ- பதிவு மற்றும் இ-பாஸ் முறை ரத்து என பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது எதெற்கெல்லாம் தளர்வுகள் எதெற்கெல்லாம் தடை என்பதை இப்பதிவில் காணலாம்.
எதெற்கெல்லாம் அனுமதி, எதெற்கெல்லாம் தடை:
- உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்க அனுமதி.
- டீ கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
- கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதி.
- தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் 50% மக்களோடு செயல்பட அனுமதி.
- டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி.
TN Job “FB Group” Join Now
- துணிக்கடைகள், நகை கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
- வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு வரை இயங்க அனுமதி.
- அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மாநிலத்திற்கும் 50% பயணிகளுடன் இயங்க அனுமதி. குளிர்சாதன பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை.
- இ-பாஸ் நடைமுறை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு தடை.
- சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்.
- மாநிலங்களில் பார்கள் இயங்க தடை தொடரும்.
- நீச்சல் குளம், அரசியல் கூட்டங்கள், சமுதாய கூட்டங்கள், பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகள் போன்றவைக்கு தடை நீடிக்கும்.
- பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்புக்கு தடை நீடிக்கும்.