நவ.1 முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
நவ.1 முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!
நவ.1 முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!
நவ.1 முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!

கேரளா மாநிலத்தில் தற்போது கொரோனா 2ம் அலை பரவல் வெகுவாக குறைந்திருக்க கூடிய சூழலில் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் துவங்க உள்ளது. இந்நிலையில் அதற்கான வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் தற்போது கொரோனா 2ம் பேரலை ஓய்ந்திருக்க கூடிய சூழலில், கேரளா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்பட உள்ளது. அந்த வகையில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையும், 10 மற்றும் 12 வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் மீண்டும் துவங்கும். அதே நேரத்தில் 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு, நவம்பர் 15 ஆம் தேதி வகுப்புகள் துவங்குகிறது. இனி வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பொது விடுமுறை நாட்கள் தவிர வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 6ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு கிடையாது? அமைச்சர் விளக்கம்!

இதனிடையே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முக்கிய வழிகாட்டுதல் நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதையும் அதன் மூலம் பள்ளிகளில் தடையற்ற கல்வி நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காகவும் அரசு பயோபபூல் போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இப்போது பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்ட சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ‘பள்ளிகளில் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக இருக்கும்.

TCS நிறுவனத்தில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிதாக 43,000 பேர் பணியமர்த்தல்!

வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். வளாகத்தில் குழந்தைகளின் கூட்டத்தை தடுக்க ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். விரிவான கல்வி நாட்காட்டி விரைவில் வெளியிடப்படும். பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பேருந்து சேவைகளை அரசு ஏற்பாடு செய்யும். மேலும் பள்ளி மாணவர்களுக்கு சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர,

  • வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோரின் ஒப்புதல் அவசியம்.
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த உயிர்-குமிழி மாதிரி பின்பற்றப்படும்.
  • திங்கள் முதல் சனிக்கிழமை வரை வகுப்புகள் நடத்தப்படும்.
  • பள்ளியில் சேர முடியாதவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
  • 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு ஒரு பெஞ்சில் அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • ஒவ்வொரு தொகுதி மாணவர்களும் வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!