ஆகஸ்ட் 8 வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு தடை!
கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 8ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பக்தர்களுக்கு தடை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஏராளமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் கொரோனா வைரசுக்கு எதிராக உடலில் செயலாற்றுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல் தேவையற்ற வதந்திகளை நம்பாமலும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.
அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – முதல்வருக்கு கோரிக்கை!
இதனால் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளையும் அளித்துள்ளது. ஓரளவு இயல்பு நிலை திரும்பும் நிலையில் மீண்டும் தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது. எனவே அரசு தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. முன்னெச்சரிக்கை பணியாக ஆகஸ்ட் 8ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த மாதம் ஆடி அமாவாசை, ஆடி 18ம் பெருக்கு, ஆடி கிருத்திகை போன்ற விசேஷங்களை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும். இதனால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் மற்றும் கோவில்பட்டி, பூவனநாதர் சுவாமி திருக்கோயிலிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.