தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்கள் மூடல் – மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் படிப்படியாக குறைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு இந்த மாத இறுதியில் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது ஆடி மாதம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tokyo Olympics 2020 Wrestling – ரவி தகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி!
ஆடி மாத திருவிழா நாட்களில் இராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட வாய்ப்புள்ளதால் வணிக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதே போல வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதால் அதற்கும் தடை விதிக்க நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
வேளாங்கண்ணியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், வார விடுமுறை நாட்களில் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அவர்களை ஆலயத்திற்குள் அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து பரிசீலனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
TN Job “FB
Group” Join Now
மேலும் விருதுநகர் மாவட்டத்திலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் விலங்குகள் பலியிடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், திருவிழாக்கள், தேரோட்டம் நடத்துதல், ஜெபகூட்டங்கள், தொழுகைகள், கூட்டுப்பிரார்த்தனைகள், மத ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.