கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு – உள்நுழைய ‘இது’ கட்டாயம்!
தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் இடம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அவர்கள்.
அரசு உத்தரவு:
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தமிழக அரசு சுற்றுலா தலங்களுக்கு பொது மக்கள் செல்வதற்கு தடை விதித்து வரும் வேளையில் தற்போது கொடைக்கானல் செல்லும் பொதுமக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானல் வருபவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவித்துள்ளார்.
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 25ல் மறுதேர்வு, செப் 30க்குள் முடிவு!
சோதனை சாவடிகளில் முறையான சான்றிதழ்களை காண்பித்தால் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறியுள்ளார். மேலும் கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ்வாக், குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடுகள் போன்ற இடங்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் கூக்கால் நீர்வீழ்ச்சி, டால்பின் முனை போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படாத நிலையிலும் கொடைக்கானலில் பட்டா இடங்கள் மற்றும் அரசு இடங்களில் கூடாரம் அமைத்து தங்குபவர்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்பாடு செய்ய உதவுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் அதிவேகமாக மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறியுள்ளார்.