பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை!
தமிழகத்தில் பல்லடம் பகுதியில் உள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் தடுப்பு பணிகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகின்றனர். நோய் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 40,000 இடங்களில் தடுப்பூசிகள் முகாம் அமைத்து ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
2020-21ல் ஓய்வு பெற்றவர்களுக்கு DA , கிராஜூட்டி கணக்கீடு – செலவுத்துறை வெளியீடு!
மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி முகாமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. தடுப்பூசி செலுத்தாத நபர்கள் அனைவரும் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் – தென் ஆப்ரிக்காவில் தொடக்கம்!
கடைகளில் பணிபுரிபவர்கள் 1 டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும். செப்.13ம் தேதி திங்கட்கிழமை முதல் நகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல்துறை ஆகியவை இணைந்து வணிக நிறுவனங்கள்,கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்வோம் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்று தெரிந்தால் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அறிவுரை படி அந்த கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்லடம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.