22 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் ஆடி மாத திருவிழாக்களை முன்னிட்டு 22 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் அரசின் கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இருந்த போதிலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் அடுத்த மாதம் வர வாய்ப்புள்ளதாக ஆய்வில் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 17 கிராமங்களில் முழு ஊரடங்கு அமல் – நிர்வாகம் அறிவிப்பு!
இது ஆடி மாதம் என்பதால் கோவில்களில் பல்வேறு திருவிழாக்கள் வரிசையாக நடைபெறும். அதனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 22 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் அழகர்கோவில், பழமுதிர்சோலை, வண்டியூர் மாரியம்மன், பாண்டி முனீஸ்வரர் உட்பட 22 கோவில்களில் நேற்று (ஆகஸ்ட் 1) முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் குவிந்ததால், சந்தையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
I want to government job 3 class