தமிழகத்தில் சிஏஏ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் சட்டசபையில் இரண்டாவது நாளாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் தமிழகத்தில் சிஏஏ மற்றும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டசபை:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின் 16 வது சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 21) கூடியது. சட்டசபை தேர்தலுக்கு பின் நடந்த முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனது உரை மூலம் தொடங்கி வைத்தார். இதில் பலவேறு அறிக்கைகளை ஆளுநர் அவர்கள் அறிவித்தார். இதை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
WhatsApp செயலியில் டெலிட் ஆன மெசேஜ்களை மீண்டும் படிப்பது எப்படி?
இன்றைய கூட்டத்தில் தமிழக ஆளுநர் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இதை எம்.எல்.ஏ.,உதயசூரியன் அவர்கள் தொடங்கி வைத்தார். நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் தமிழகத்தில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் வருகிற ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். மேலும் ஆளுநர் அவர்கள் உரையாற்றிய கூட்டத்தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.