Infosys நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – ராஜினாமா செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

0
Infosys நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் - ராஜினாமா செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
Infosys நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் - ராஜினாமா செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
Infosys நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – ராஜினாமா செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், சமீபத்தில் வேலையை ராஜினாமா செய்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

புதிய கட்டுப்பாடுகள்

சமீப காலமாக இந்தியாவில் கொரோனா பேரலைத்தொற்றின் தாக்கம் குறைந்திருப்பதால் முன்னணி IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளது. இப்போது WFH முறையால் கவர்ந்திழுக்கப்பட்ட IT ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்ப விரும்பாமல் தங்களது வேலைகளை ராஜினாமா செய்ய முயற்சித்து வருகின்றனர். இதனுடன் வழக்கமாக ஒரு சில ஊழியர்கள் தங்களது வேலைகளை மாற்றுவதற்காக ராஜினாமா செய்துள்ளனர். இந்த சூழலில் இன்போசிஸ் நிறுவனம், சமீபத்தில் வேலையை ராஜினாமா செய்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

மே 2 முதல் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

இந்த கட்டுப்பாடு ஊழியர்களின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கு பேரிடியாக இருக்கும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் மீது ஐடி ஊழியர்கள் யூனியன் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது, இன்போசிஸ் நிறுவன வளாகத்தில் இருந்து வெளியேறிய ஊழியர்கள், அதன் சக போட்டியாளர்கள் எனப் பட்டியலிட்டுள்ள குறிப்பிட்ட 5 நிறுவனங்களின் வாடிக்கையாளரும், இன்போசிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளரும் ஒன்றாக இருந்தால் அந்த நிறுவனத்தில் 6 மாதம் பணியாற்ற தடை விதித்துள்ளது. இந்த புதிய விதிகள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த செயல்பாடுகளை கண்டித்து NITES தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு இன்போசிஸ் நிறுவன ஊழியர் தனது ராஜினாமாவுக்கு பிற்பாடு 6 மாதங்களுக்கு அல்லது 12 மாதங்களில் அதன் வாடிக்கையாளரிடம் இருந்து வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்ள கூடாது. இன்போசிஸின் போட்டி நிறுவனத்தின் வேலை வாய்ப்பை ஏற்கவும், அங்கு பணிபுரியவும் கூடாது என்று புதிய விதிமுறைகளை ஊழியர்கள் மத்தியில் திணித்துள்ளதாக தெரிகிறது.

ExamsDaily Mobile App Download

இப்போது இன்போசிஸ் தனது சக போட்டியாளராக டிசிஎஸ், ஐபிஎம், காக்னிசென்ட், விப்ரோ, அக்சென்சர் ஆகிய நிறுவனங்களை குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் எண்ணிக்கையை குறைப்பதற்காக மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் கடந்த 3 மாதத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 80000 ஊழியர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். எப்படி என்றாலும் இந்த புகார் விசாரணைக்கு வரும் பட்சத்தில் இன்போசிஸ் நிறுவனம் தோல்வியை சந்திக்கும் என்று வழக்கறிஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!