வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதம் மாற்றம்? ரிசர்வ் வங்கி விளக்கம்!
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் உள்ளதா என்பது குறித்து தற்போது ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் விளக்கமளித்துள்ளார்.
வட்டி விகிதம்:
நாட்டில் உள்ள அனைத்து மாநிலமும் தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தொழில்துறை வழக்கம் போல் இயங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் தற்போது நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனை சரிசெய்வதற்கு தற்போது அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பயனாளர்களின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் என்று தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இதனை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு!!
அதன்படி வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 3.35 சதவிகிதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.