மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி – அச்சத்தில் பொதுமக்கள்!

0
மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி - அச்சத்தில் பொதுமக்கள்!
மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி – அச்சத்தில் பொதுமக்கள்!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதும் வங்கிகள் தாங்கள் வழங்கும் வீட்டுக் கடன், அடமானக் கடன், வாகனக் கடன் போன்றவற்றின் வட்டிகளை உயர்த்தின. இந்நிலையில், மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மேலும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு:

ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கியது. மேலும் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் நேற்று முடிவடைந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உலகில் நிலவும் அசாதாரண சூழல், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் காணப்படும் பின்னடைவு, எதிர்பாராத பணவீக்க அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக,ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்து உள்ளதாக அறிவித்தார்.

Exams Daily Mobile App Download

இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக உயர்ந்து உள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்பட உள்ளது. ஏனெனில், ரெப்போ வட்டி உயர்வின் தாக்கம் மற்ற அனைத்து வங்கிக் கடன்கள் மீதும் இருக்கும். அதாவது வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தும். இதனால் வாடிக்கையாளர் அதிக பாதிப்பை சந்திப்பார்கள். இருப்பினும் ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் பணம் போட்டவர்களுக்கு சலுகை கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மகளிருக்கான இலவச “பிங்க்” நிற பேருந்து சேவை – உதயநிதி MLA துவக்கி வைப்பு

மேலும் இந்தியப் பொருளாதாரம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் வளர்ச்சிக் கணிப்பில் எவ்வித மாற்றமும் இன்றி, நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாகவும், முதல் காலாண்டில் 16.2 சதவீதமாகவும் உள்ளது என்று ஆளுநர் கூறினார். 2-ம் காலாண்டில் 6.2% 3-வது காலாண்டில் 4.1% மற்றும் 4-வது காலாண்டில் 4.0%. 2023-24-ஆம் ஆண்டுக்கான உண்மையான பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. பணவீக்கத்தை பொறுத்தவரையில், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவீதமாகவும், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 6.4 சதவீதமாகவும், ஜனவரி – மார்ச் காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டு கடன் வாங்கியவர்கள் என்ன செய்யலாம்:

வீட்டு கடன் வாங்கியவர்கள், கடனை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்துவது நல்லது. நீங்கள் ஆண்டுக்கு 5% முன்கூட்டியே செலுத்தினால், அதிகரித்த வட்டி விகிதச் சுமையைக் கணிசமாகக் குறைக்கலாம். மேலும் கடனாளிகள் குறைந்த வட்டி விகிதத்திற்கு மறுநிதியளிப்பு செய்யலாம் அல்லது தற்போது உள்ள கடன்களுக்கு அதிக வட்டி செலுத்துவதைத் தவிர்க்க அவர்களின் EMI களை அதிகரிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!