உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் – மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு!
தமிழகத்தில் நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான கட்சி மற்றும் பதவி வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் தற்போது மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டுள்ளார்.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் சமீபத்தில் புதிதாக பிரிக்கப்பட்டது. அப்போது உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு எல்லை பிரிக்கும் பணிகள் நிலுவையில் இருந்தது. இதனால் இந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே 2 முறை தேர்தலை தள்ளிவைக்க கால அவகாசம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வாங்கப்பட்டுள்ளது. தற்போது 3ம் முறையாகவும் 6 மாத கால அவகாசம் கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,556 பேருக்கு கொரோனா உறுதி; பலி எண்ணிக்கை 18 – சுகாதாரத்துறை அறிக்கை!
உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 31ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 6ம் தேதியான இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு நடைபெற இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பின் படி, இன்று அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. ஆலோசனையில் இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிட வேண்டும் என்று கட்சிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடஇதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு விவரம் வருமாறு:
பொதுப்பிரிவு – நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர்
பொது (பெண்கள்) – தென்காசி, ராணிபேட்டை
எஸ்.சி (பெண்கள் ) – செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி