தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடியில் இட ஒதுக்கீடு? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை ஐஐடி சார்பில் துவங்கப்பட்டுள்ள STEM திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியதை பற்றி பார்ப்போம்.
மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அத்துடன் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் உயர் கல்வியில் சேருவதை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகிறது. இதையடுத்து சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கான STEM என்ற கோடைக்கால பயிற்சி திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் படி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் நூறு மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக ஜூன் 20 முதல் 25 ஆம் தேதி வரை என 6 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன்படி இந்த இத்திட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு பயின்ற கிராமப்புற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். அதன்படி நேற்று சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் இந்த 6 நாள் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது.
இந்திய விமானப்படையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – ஜுன் 24 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, சென்னை ஐஐடி சார்பில் துவங்கப்பட்டுள்ள STEM திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி கல்வி எட்டாக் கனியாக எதுவும் இருந்து விடக்கூடாது என்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சரிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி இது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.