அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – முதல்வருக்கு கோரிக்கை!
புதுச்சேரியில் முழுமையாக செவித்திறன் இல்லாதவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என காதுகேளாதோர் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பணிகளில் முன்னுரிமை:
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. கல்வியிலும் வேலை வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளித்து வருகிறது. அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பை அளிக்கிறது. அவர்கள் தொடர்ந்து கல்வி பயில படிக்கும் போது மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்க அரசு உதவி செய்கிறது. மேலும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு!
அதன்படி புதுச்சேரியில் காது கேளாதோருக்கு அரசு வேலைவாய்ப்புகளும், உதவித்தொகைகளும் வழங்கி வருகிறது. இந்த வாய்ப்புகள் காதுகேளாதோர் மற்றவர்களின் உதவியின்றி சுயமாக சமூகத்தில் வாழ அரசு வழி வகை செய்கிறது. இதுவரை புதுச்சேரியில் 45 சதவீத காதுகேளாமை உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. மேலும் தற்போது நிலவி வரும் கொரோனா பேரிடர் காலத்தில் காது கேளாதோருக்கு அரசு உதவித்தொகையை வழங்கியது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் முழுமையாக செவித்திறன் பாதித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என காதுகேளாதோர் சங்கத்தினர் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 95 சதவீதம் முதல் 100 சதவீதம் செவித்திறன் பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 3,000 திலிருந்து 6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என காதுகேளாதோர் சங்கத்தினர் முதல்வரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.