தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு – கமிட்டி ஆலோசனை!!

0
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு - கமிட்டி ஆலோசனை!!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு - கமிட்டி ஆலோசனை!!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு – கமிட்டி ஆலோசனை!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கியது போல இன்ஜினியரிங், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு கமிட்டி ஆலோசனையை தொடங்கியுள்ளது.

அரசு ஆலோசனை:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஆலோசனை முடிவில் தமிழக அரசு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

இன்று திருச்சியின் முக்கிய பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!!

இதனால் மூலமாக ஏழை, எளிய மாணவர்கள் பலர் பயனடைந்தார்கள். 2020- – 21ம் கல்வி ஆண்டில் 450 அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவ படிப்புகள் தவிர மற்ற பொறியியல் போன்ற படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என நீதிபதி முருகேசன் தலைமையில் கமிட்டி அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில், இந்த கமிட்டி சார்பில் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதில், நீதிபதி முருகேசன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன், பள்ளிக் கல்வி முதன்மை செயலர் உஷா, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் லட்சுமி பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் குறித்த விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கால்நடை மருத்துவம், சட்டம், வேளாண்மை, மீன்வளம், இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளில் குறைவான எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் உள்ளதால், அதனை அதிகரிப்பதற்கான கருத்துக்களை அந்த துறை சார்ந்த செயலாளர்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு கல்லுாரிகள், பல்கலைகள் மட்டுமின்றி, தனியார் கல்லுாரிகள், பல்கலைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது முதல் கூட்டம் என்பதால் இதில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்த பின்பே உரிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!