தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வு பணிகள் தொடக்கம்!
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் ஆய்வுக்கு 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இன்று முதல் ஆய்வு செய்யும் பணியை தொடங்கியது.
கூட்டுறவு வங்கிகள்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டுறவு வங்கிகளில் பெற 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியானது முதல் மக்கள் கூட்டுறவு சங்ககளில் அடகு வைத்த நகையை மீட்க தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் நிலவும் நிதி நெருக்கடியில் முழு கடனையும் தள்ளுபடி செய்ய இயலாத நிலையில் அரசு உள்ளது.
IPL 2021: KKR vs DC இன்று பலப்பரீட்சை! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?
அதனால் நகைக்கடன் தள்ளுபடிக்கு கடும் நிபந்தனைகள் கொண்டு வர அரசு திட்டமிட்டது. கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நகைக்கடன் பெற்றவர்களின் விவரம் குறித்த ஆய்வு மேற்கொள்ள அரசு சார்பாக குழு அமைக்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் கூட்டுறவு நகைக்கடன் குறித்து மதுரை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஸ்மார்ட்போன், ஆனால் ஒரே WhatsApp – சூப்பர் அப்டேட்! பயனர்கள் கவனத்திற்கு!
இந்த குழுவின் ஆய்வு பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் என மொத்தம் 108 கிளைகள் உள்ளன கடந்த மார்ச் மாத நிலவரப்படி மொத்தம் 71,409 பெயர்களில் ரூபாய் 291 கோடி வரை கடன் பெறப்பட்டுள்ளது. இந்த கடன் தொகைக்கு ஏற்ப நகைகள் இருப்பு உள்ளதா, போலி நகைகள் உள்ளதா என ஆய்வு நடைபெறவுள்ளது. நவம்பர் 15ம் தேதிக்குள் ஆய்வு பணிகளை முடித்து நவம்பர் 20ம் தேதிக்குள் மண்டல இணை பதிவாளர் மூலம் பதிவாளருக்கு அனுப்ப உள்ளனர்.