தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அரசு ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்திலும் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பிறகும் அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் எந்தவொரு பலனும் கிடைப்பதில்லை என்று ஊழியர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அரசு இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த கூட்டத்தில், தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது மற்றும் ஆசிரியர் நலன் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர், மாவட்ட துணைத் தலைவர் மற்றும் மாவட்ட தலைவர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் அரசு இது தொடர்பாக விரைவில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து இது தொடர்பாக அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.