கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி – மத்திய அமைச்சருக்கு கோரிக்கை!
இந்தியாவில் கொரோனா தொற்றால் தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கே.வி பள்ளிகளில் இலவச கல்வி அளிக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சருக்கு பிஜேடி எம்.பி அமர் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கே.வி பள்ளிகளில் இலவச கல்வி:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாநிலம் தோறும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் குறையவில்லை. முதல் கொரோனா அலையில் நாடு முழுவதும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இணை நோய் உள்ளவர்கள் அதிகம் உயிரிழந்தனர். ஆனால் கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்களும், நடுத்தர வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 1 முதல் அரசு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். சில குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்து பாதுகாக்க ஆள் இன்றி சிரமப்படுகின்றனர். குழந்தைகள் மனதளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகளை காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளையும், கொரோனா இழப்பீடு தொகைகளையும் அறிவித்தன. அவர்கள் பட்டம் பெறும் வரை ஆக கூடிய அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும், மேலும் மாதந்தோறும் உதவித்தொகைகள் வழங்கப்படும் என மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனாவால் தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கே.வி பள்ளிகளில் இலவச கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கு பிஜேடி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, இறப்பு சான்றிதழ் அடிப்படையில் உடனடியாக அருகில் உள்ள மத்திய அரசின் ஏதாவது ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இடம் அளிக்க வேண்டும். இட ஒதுக்கீடு, பள்ளி வகுப்பு, மாணவர்கள் எண்ணிக்கை போன்ற எதையும் கருத்தில் கொள்ளாமல் அந்த குழந்தைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளார்.