தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு? முதல்வருக்கு கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியருக்கும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர், கடந்த கொரோனா காலங்களில் நிறுத்திவைக்கப்பட்டதான அகவிலைப்படியை வழங்ககோரி முதல்வர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதாவது தமிழகத்தில், மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதே வேளையில் பல்வேறு சலுகைகளை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவை முடிந்ததும் இந்த கோரிக்கைகள் குறித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வரின் நிலைப்பாடு என்ன?
அந்த வகையில் தற்போது அகவிலைப்படியை எதிர்பார்த்து, ரேஷன் ஊழியர் சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘தமிழக அரசின் கூட்டுறவு துறை நடத்தும் ரேஷன் கடைகளின் பணியாளர்களுக்கு இதுவரை அகவிலைப்படி தொகை வழங்கப்படவில்லை. எங்களது ஊழியர்கள் கொரோனா போன்ற பேரிடர் காலத்திலும் பணியை மேற்கொண்டனர். ஆனால் எங்களுக்கு இன்னும் அகவிலைப்படி தொகை வழங்கப்படவில்லை. அதனால் தமிழக முதல்வர் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்க பரிசீலனை செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.