தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பு – முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பு - முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பு - முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பு – முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை!

தமிழக பள்ளிகளில் கொரோனா பரவல் காரணமாக 2021-22 ஆம் கல்வியாண்டு கால தாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது ஜூன் இரண்டாம் வராம் வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோடை விடுமுறை அறிவிப்பு:

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பள்ளிகள் செயல்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்கு பின் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதனால் 2021-22 கல்வியாண்டில் காலதாமதமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து மே மாதம் வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோடை விடுமுறை முன்கூட்டியே விட வேண்டும் என அறிவுறுத்தபட்டது. அதன் பின் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 14 ஆம் தேதி வரை விடுமுறை எனவும் அதன் பின் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2, 2A தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – தாலுகா வாரியாக தேர்வு மையம் இல்லை!

ஆனால் கொரோனா காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்ததால் ஏராளமான மாணவர்கள் கல்வியை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று இருக்கின்றனர். அதனால் தற்போதும் கோடை விடுமுறை நாட்கள் அதிகமாக விட்டால், மாணவர்களுக்கு படிப்பு மீது இருக்கும் ஆர்வம் குறைந்துவிடும். எனவே ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்க வேண்டும். அதன் பின்னர் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் உட்பட சில சலுகைகளை வழங்கி அடிப்படை கல்வியை சொல்லித் தந்து படிப்பதை உறுதி செய்திட ஆர்வத்தைத் தூண்டுவதற்கு ஒரு மாதம் முழுக்க சரியாக போய்விடும். எனவே ஜூன் முதல் வாரம் பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!