TN TRB தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு? வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதி முதுகலை கணக்கு பாடத்திற்கு மற்றும் யுஜிசி பேராசிரியர் பணிக்கான தேர்வும் நடைபெறவுள்ளது. இரன்டு தேர்வுகளும் ஒரே நேரத்தில் நடப்பதால் தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் அரசு ஆசிரியர் பணிகளுக்கு ஆசிரியர் தேர்வாணையத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு பள்ளிகளில் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏராளமானோர் கல்வியியல் பட்டம் பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது.
உக்ரைன் மீது போர் தொடுக்க ஆயத்தமாகும் ரஷ்யா? பதட்டத்தில் உலக நாடுகள்! இந்தியாவின் நடவடிக்கை என்ன?
அதனால் போட்டித் தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோரிக்கை எழுந்து வருகிறது. இதனை அடுத்து முதல் அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஏப்ரல் 3ம் வாரத்தில் டெட் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு பென்சன், பணிக்கொடை தொகை உயர்வு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இந்நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு கடந்த வாரம் தொடங்கியது. இதில் பிப்ரவரி 16ம் தேதி முதுகலை கணக்கு பாடத்துக்கான தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. அதே தேதியில் யுஜிசி, பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வும் நடைபெறவுள்ளது. இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவதால் இரு தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏதேனும் ஒரு தேர்வு தேதியை மாற்ற வேண்டும் இரு தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.