தமிழக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வயது வரம்பு நீக்கம் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமன வயது வரம்பை அரசு நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள் வயது வரம்பு:
தமிழகத்தில் ஆசிரியர்கள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். கடந்த ஜூன் மாதம் திமுக தலைமையிலான அரசு ஆசிரியர் தேர்வாணையத்தை கலைப்பதாக முடிவெடுத்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியர் தேர்வாணையத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக 2 வருடங்களாக ஆசிரியர் தகுதி தேர்வுகளை ஏதும் நடைபெறவில்லை.
செப்.21 வரை நாடு தழுவிய முழு முடக்கம் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
அதனால் தற்போது அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலியாக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வு நடத்தி பணி முதுநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் 40 வயதை கடந்த பட்டதாரி ஆசிரியர்கள் பங்கு பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று முறை மட்டும் தான் முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகள் நடைபெற்றுள்ளது.
Jio நிறுவனத்தில் ரூ.100க்கு கீழ் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தம் – பயனர்கள் அதிர்ச்சி!
ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் நியமன தேர்வு நடத்தாத அரசுக்கு அதற்கான வயது வரம்பை நிர்ணயிக்க உரிமையில்லை என்று கூறியுள்ளார். ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் பள்ளி கல்வித்துறையின் 12 ஆம் எண் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க முதல்வர் ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஓராண்டு பணி செய்யும் தகுதியுடைய அனைவரும் ஆசிரியர் பணி போட்டித் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.