TNPSC Group 2, 2a தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் எந்த பாடத்திட்டத்தில் நடைபெறுமென தெளிவுபடுத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடக்குமா அல்லது பழைய பாடத்திட்டத்தின்படி நடக்குமா என்பது தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு
குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும். குரூப் 2 பதவிகளுக்கான வயது தகுதி, பொது பிரிவினருக்கு 18 முதல் 32 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு வயது வரம்பு கிடையாது. குரூப் 4 தேர்வுகளுக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. குரூப் 2 வில் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!
அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸ் காரணமாக எந்த அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தன. அதனால் போட்டித் தேர்வுக்கு தயாராக இருந்த மாணவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கொரோனா குறைந்த நிலையில் போட்டி தேர்வுகளை நடத்துவதற்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ, குரூப்-4 பிரிவில் 12,800 காலியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் இது குறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது, ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பள்ளி பாடப்புத்தகங்கள் கொண்டு தயாராவதால் இந்த குழப்பம் ஏற்படுகிறது. தேர்வின் வினாக்கள் 90 சதவீதம் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து இடம்பெறுகிறது. இதனால் புதிய பாடத்திட்டத்தில் அல்லது பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுமா என தேர்வர்கள் குழம்புகின்றனர். எனவே டிஎன்பிஎஸ்சியில் தேர்வர்களின் குழப்பத்தை தீர்க்க முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.