தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுப்பு குறித்த அறிக்கை – தகவல் வெளியீடு!
இந்தியாவில் கொரோனா வைரஸின் உருமாறிய தொற்றான ஓமிக்ரானின் பிஏ 2.75 என்ற புதிய துணை வகை வைரஸ் அதிகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அரசு ஊழியர்கள் எத்தனை நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றி மனிதவள மேலாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனாவின் மூன்று அலைகளில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் கொரோனா பரவல் அதிகமாகத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க கொரோனா வைரஸின் உருமாறிய தொற்றான ஓமிக்ரானின் பிஏ 2.75 என்ற புதிய துணை வகை வைரஸ் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இது அதிகம் பரவும் தன்மையுடன் இருப்பதால் தினசரி பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், போதிய சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது பற்றி மனிதவள மேலாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கூடுதல் வெப்பத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
அதன் படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் இருந்தாலும், சிகிச்சையில் இருந்தாலும் அத்தனை நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையில் தனிமைப்படுத்தலில் இருந்த நாட்கள், சிகிச்சையில் இருந்த நாட்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அதிகம் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள், அதற்கான அறிவிப்பை சமர்ப்பித்தால், அவர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.