தமிழக அரசு பள்ளிகளில் 1031 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – வெளியான அறிக்கை!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகள் மூலமாக நிரப்படுகின்றனர். இந்நிலையில் 01.06.2022 நிலவரப்படி வரை 1031 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆசிரியர் பணியிடங்கள்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் TRB மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஊதியம் குறைவாக இருப்பதால் பலர் விண்ணப்பிக்காமல் இருக்கின்றனர்.
மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 37,554 அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு 2.20 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு தகுந்தாற் போல ஆசிரியர்கள் இல்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சமூக அறிவியல் காலிப் பணியிடங்கள் பற்றி அறிவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐடி துறை ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – விவரம் இதோ!
அதன் படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 01.06.2022 நிலவரப்படி வரை 1031 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்ற விவரம் RTI பதிலாக மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது. மேலும் இந்த பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்