Apple நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – அலுவலகத்திற்கு வர சொல்லி அறிக்கை!

0
Apple நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - அலுவலகத்திற்கு வர சொல்லி அறிக்கை!
Apple நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - அலுவலகத்திற்கு வர சொல்லி அறிக்கை!
Apple நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – அலுவலகத்திற்கு வர சொல்லி அறிக்கை!

நாடு முழுவதும் IT நிறுவனங்கள் முதல் தொடக்க நிறுவனங்கள் வரை அனைத்தும் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர சொல்லி அழைப்பு விடுத்து உள்ளன. அந்த வகையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் ஊழியர்களை வாரத்தில் மூன்று நாட்களுக்கு அலுவலகத்திற்கு வரச் சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Apple நிறுவனம்:

கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு அலுவலகப் பணியாளர்களும் வீட்டிலிருந்து பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி அளித்தன. மேலும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறி, பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ‘WORK FROM HOME’ முறையை தொடர்ந்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில், பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலத்திற்கு திரும்பும்படி அழைத்து வருகின்றன. இந்நிலையில் TCS, HCL, Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் போது, ஹைப்ரிட் மாடல் வேலைகளைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது டெக் உலகின் ராஜா ஆப்பிள் இன்க் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தொற்றுநோய் காரணமாக நீண்ட நாள் வீட்டிலிருந்து வேலை செய்த ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வர பல நிறுவனங்கள் வலியுறுத்துகிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவன ஊழியர்களும் தற்போது அலுவலகத்திற்கு வர வேண்டிய நேரம் இது, என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று செப்டம்பர் 5 காலக்கெடுவை ஆப்பிள் அறிவித்துள்ளது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு Apple நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஹைப்ரிட் வேலை முறையைத் தொடர அறிவுறுத்தியது.

வீட்டிற்கு தெரியாமல் கதிர் கடைக்கு வந்த ஐஸ்வர்யா & மீனா, கடையை பற்றி கண்ணனிடம் விசாரித்த மூர்த்தி – இன்றைய எபிசோட்!

அந்த ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் ஆப்பிள் ஊழியர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள், ஆனால் நிறுவனம் இப்போது அதன் முழு வருவாய் அட்டவணையை செயல்படுத்துகிறது. முதலில் ஆப்பிள் நிறுவனத்தின் பணியாளர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது, ஆனால் ஆப்பிள் நிறுவனம் அந்த திட்டத்தை மாற்றியுள்ளது. இந்தத் தகவலை ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் அறிக்கையின்படி, அனைத்து ஊழியர்களும் செவ்வாய் மற்றும் வியாழன் அன்று அலுவலகத்தில் இருக்க வேண்டும், ஆனால் மூன்றாவது நாள் குழு தலைவர்களால் அமைக்கப்படும் மற்றும் குழுவிற்கு குழு மாறுபடும். மற்ற நாட்களில், பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!