இந்தியாவில் மீண்டும் உயர்ந்த ரெப்போ விகிதம் – பணவீக்க எதிரொலி!

0
இந்தியாவில் மீண்டும் உயர்ந்த ரெப்போ விகிதம் - பணவீக்க எதிரொலி!
இந்தியாவில் மீண்டும் உயர்ந்த ரெப்போ விகிதம் - பணவீக்க எதிரொலி!
இந்தியாவில் மீண்டும் உயர்ந்த ரெப்போ விகிதம் – பணவீக்க எதிரொலி!

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை ஆதரிப்பதற்காகவும் இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் 5.4 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதனால் கடன் EMI கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் உயர்வு:

இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் கூட்டம் கடந்த ஆக.3ஆம் தேதி முதல் தொடங்கி மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கடன்களுக்கான ரிசர்வ் வங்கி வட்டியை 50% அதிகரிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ் தெரிவித்தார். இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? எதிர்பார்ப்பில் தேர்வர்கள்!

மேலும் அவர், விலைவாசி உயர்வு சற்று தனியத்தொடங்கினாலும், பொதுமக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் நிலையில் தான் உள்ளது. 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பணவீக்க வீகிதமும் 6.7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த காலாண்டுகளில் பணவீக்கம் மெல்ல குறையும். இந்த ரெப்போ ரேட் உயர்வானது வங்கிக்கடன் பெறும் பொது மக்கள் பலரை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் கூடுதல் வட்டியை கட்ட, வங்கிகள் அந்த வட்டி சுமையை தங்கள் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தும், அதாவது, ரெப்போ வட்டி உயர்ந்தால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தும், ரெப்போ வட்டி குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும். தற்போதைய ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகள், வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவற்றுக்கான வட்டியை அதிகரிக்கும். இது வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும்.

வீட்டு கடன் வாங்கியவர்கள் என்ன செய்யலாம்:

வீட்டு கடன் வாங்கியவர்கள், கடனை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ முன்கூட்டியே செலுத்தினால், அதிகரித்த வட்டி விகிதச் சுமையைக் கணிசமாகக் குறைக்கலாம். மேலும் கடனாளிகள் குறைந்த வட்டி விகிதத்திற்கு மறுநிதியளிப்பு செய்யலாம் அல்லது தற்போது உள்ள கடன்களுக்கு அதிக வட்டி செலுத்துவதைத் தவிர்க்க அவர்களின் EMI களை அதிகரிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!