ஆல்யா மானசா, சஞ்சீவ் இடையே சண்டை? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
ஆல்யா மானசா, சஞ்சீவ் இடையே சண்டை? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!
ஆல்யா மானசா, சஞ்சீவ் இடையே சண்டை? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!
ஆல்யா மானசா, சஞ்சீவ் இடையே சண்டை? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ஆலியாவிடம் உங்களுக்கும் சஞ்சீவிற்கும் சண்டைகள் ஏதும் வந்துள்ளதா, அந்த பிரச்சனைகளை எவ்வாறு சமாளித்து கொள்வீர்கள் என கேட்ட கேள்விக்கு ஆலியா ஓப்பனாக ஒரு பதில் ஒன்றை கூறியுள்ளார்.

ஆலியா:

கடந்து 2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி-சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஜோடி தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். தற்போது ஆலியாவிற்கு ஐலா பாப்பா மற்ற அர்ஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு முழுவதுமாக சீரியலில் இருந்து விலகி உள்ளார். ஐலா பாப்பா பிறந்த போது கூட சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் தற்போது சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நடித்து வருவதால் குழந்தையை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தினால் ஆலியா சீரியலில் இருந்து தற்போதைக்கு விடுப்பு எடுத்துள்ளார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!

ஆலியா எப்போது மீண்டும் சீரியலில் இணைந்து கொள்வார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர். அவ்வப்போது தனது மகன் மற்றும் ஐலா பாப்பாவுடன் இருக்கும்படியான புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எப்போதும் ஒரே மாதிரி காதலித்துக் கொண்டே இருப்பதில்லை. அவ்வப்போது சண்டையிட்டுக் கொண்டு தான் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் தற்போது வரைக்கும் வரை அதே காதலுடன் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

தற்போது ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி கேட்டு அதற்குரிய பதிலை கூறும்படியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டதே கிடையாதா என கேட்டுள்ளார். அதற்கு நாங்கள் அதிகமாக சண்டை போட்டுக்கொள்ள மாட்டோம். அப்படி எங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் வந்தாலும் கூட பெரிதாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருப்போம். பின்பு, யார் மீது தவறு இருக்கிறதோ அவரே வந்து மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்வோம். மிகப்பெரிய அளவில் எங்களுக்குள் பிரச்சினை ஏதும் வந்தது கிடையாது என அதற்கு பதில் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!