1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இன்று முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் அரசு உத்தரவின் பேரில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் 2ம் அலையின் பாதிப்பு குறைந்து வந்ததால் பள்ளிகள் திறக்க அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு கடந்த மாதம் முதல் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் குறைந்து வந்துள்ளது.
தமிழக அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் – நீதிமன்றம் உத்தரவு!
இதனால் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள உயர்கல்வி வகுப்புகளான 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இருப்பினும், அரசு அறிவித்துள்ள அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் மற்றும் பள்ளியில் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும்.
தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மற்ற வகுப்புகளுக்கு பள்ளி மீண்டும் திறப்பதற்கான ஆலோசனை முன்னதாக நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இடைநிலைக் கல்வி இயக்குநரகத்தில் நடந்த கூட்டத்தில் செப்டம்பர் 13ம் தேதியான இன்று முதல் மீண்டும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதனால் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.