மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வீட்டு வாடகைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 34% ஆக அதிகரிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக வீடு வாடகை படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வீட்டு வாடகை படி:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா பெருந்தொற்று பரவுவதால் மத்திய மாநில அரசுகள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் 2022, ஜனவரி 1 முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் நாளை (ஏப்.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன் படி கடந்த 1ம் தேதி மத்திய அமைச்சரவை 3% அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது, அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அகவிலைப்படியை தொடர்ந்து அடுத்ததாக வீட்டு வாடகைபடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச HRA விகிதம் 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்த பட வாய்ப்பு உள்ளது கூறப்படுகிறது. 7வது ஊதிய குழுவின் கணக்கீடுபடி அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.56,900 இதில் HRA 27 சதவீதம் கணக்கிட்டால் ரூ.56900 × 27/100 = ரூ.15363 ஆகும். மேலும் மாதாந்திர HRA = ரூ.56,900 × 30/100 = ரூ 17,070 ஆக மாதத்தில் மொத்த வேறுபாடு ரூ.1707 மாதாந்திர HRA உயர்வு = ரூ.20,484 ஆகும்.