தமிழக கோவில்களில் திருப்பணி நடந்தாலும் ‘இதற்கு’ அனுமதி – அமைச்சர் பேட்டி!

0
தமிழக கோவில்களில் திருப்பணி நடந்தாலும் 'இதற்கு' அனுமதி - அமைச்சர் பேட்டி!
தமிழக கோவில்களில் திருப்பணி நடந்தாலும் 'இதற்கு' அனுமதி - அமைச்சர் பேட்டி!
தமிழக கோவில்களில் திருப்பணி நடந்தாலும் ‘இதற்கு’ அனுமதி – அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வந்தாலும் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார்.

கோவில்கள்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் சம்மந்தமான கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என கோவில் தீட்சிதர்களுக்கு இந்து அறநிலையத்துறை ஆணையர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அத்துடன் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை நடவடிக்கைக்கு உட்படுத்த சட்டத்தில் இடமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளதாவது, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் இக்கோவிலானது நம் மண்ணை ஆண்ட மன்னர்களால், முன்னோர்களால் உருவாக்கப்பட்டது என கூறியுள்ளார். அதனால் கோவிலின் கணக்கு வழக்குகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கோவிலின் தீட்சிதர்களின் கடமையாகும் என்று தெரிவித்து உள்ளார்.

தொழிலக பணியாளர் உணவு தயாரிப்பிற்கு சிறப்பு குழு – சுகாதார இயக்குநர் அறிவுறுத்தல்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இவர் தெரிவித்துள்ளதாவது , சிதம்பரம் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையின் சட்ட விதிகள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்தில் கோவில்களில் திருப்பணி நடைபெற்று வந்தாலும் கோவிலில் திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!