பிரதமர் மோடி டீ விற்ற ரயில் நிலையம் ரூ.8.5 கோடி செலவில் புதுப்பிப்பு – இன்று திறந்து வைப்பு!
குஜராத் மாநிலத்தில் மெஹசானா மாவட்டத்தின் வாட்நகரில் அமைந்துள்ள ரயில்நிலையம் ரூ.8.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று காணொளி மூலமாக திறந்து வைக்க உள்ளார்.
ரயில் நிலையம் திறப்பு:
இந்தியா, குஜராத் மாநிலத்தின், மெகசானா மாவட்டத்தில் உள்ள தொன்மையான நகரம் ஆகும். இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நகரம் ஆகும். வாட்நகர் ரயில்நிலையம் இரண்டு நடைமேடைகளுடன் கூடியது. இந்த ரயில் நிலையம் வழியாக நாள் ஒன்றிற்கு ஆறு ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் தான் பிரதமர் மோடி சிறு வயதில் தேநீர் விற்றார். இந்நிலையில் இந்த ரயில்நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.
TCS, Infosys, Wipro நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – விரைவில் அலுவலகத்திற்கு வரவழைக்க திட்டம்!
இது குறித்து, மேற்கு ரயில்வே பிரிவின் மேலாளரான ரவி குமார் ஜா கூறுகையில், வாட்நகர் ரயில்நிலையம் பாரம்பரிய வளையத்தின் பகுதியில் அமைந்துள்ளது. அந்த ரயில்நிலையம் ரூ.8.5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு பாரம்பரிய தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் இருந்து காணொளி மூலமாக திறந்து வைக்கிறார்.
TN Job “FB Group” Join Now
குஜராத்தில் பிரதமர் மோடி வேறு சில திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். காந்திநகர் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஐந்து நட்சத்திர விடுதியையும் திறந்து வைக்கிறார். காந்தி நகரில் இருந்து வரேதா வரை செல்லும் புறநகர் பயணிகள் ரயிலையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த பாதையில் அமைந்திருக்கும் முக்கிய ரயில் நிலையத்தில் வாட்நகரும் ஒன்றாகும். புகழ்பெற்ற தரங்கா மலையின் அருகில் அமைந்துள்ள வரேதா ரயில் நிலையம் புனித தலமாகவும், பிரபல சுற்றுலா தலமாகவும் உள்ளது.
இது தேவையா ? மக்கள் சாப்பாட்டு லாட்டரி